Saturday, July 10, 2010

அறிவு, உடல் சக்திகள் வீணாகிறதே


நீதி, நெறி , நன்கறிந்த  மனிதர்  வாழ்வில்
       நெருக்கடி  ஏன்வந்த தென்று கணக்குப்பார்க்க,
ஆதிநிலை  இருப்பெடுத்தால்,   அதன்பின்  வந்த
       அணுமுதலாய்  அண்டபிண்டம்,  அறிவு- லாபம்.
சாதி,  மத, தேசமொழி,  இனபேதங்கள்
       தனிஉடமைப்பற்று,  இந்த  வகையின் முலம்
பாதிக்குமேல்  மனிதர்  சக்தி  வீணாய்ப்
       பயனற்றுப்  போவதை  நாம்  தெரிநது கொண்டோம்.

                                                                             - வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.